தேவ கிருபை நம்மை ஆள்வதாக. இது சரியில்லை அது சரியில்லை என்று சதா கஷ்டங்களையும் கற்பனைகளையும் பிணைத்து வைத்தால் மிஞ்சுவது கோபமும், வெறுப்பும், ஏமாற்றமும் தான். புலம்பல் புஸ்தகத்தை எழுதிய எரேமியா தீர்க்கன் கூட – புதிய காலையில் புதிய கிருபை என்று நினைவு கூறுகிறார். (புலம்பல் 3:23)நாம் செய்த கொடுமையான தவறுகளை கூட தேவன் மன்னித்து, மறந்து புதிய கிருபையை கொடுக்கும் போது, மனிதர்களான நாம் ஒருவருக்கொருவர் எவ்வளவு போட்டி, பொறாமைகள், வீண் கற்பனைகளை வளர்த்து… Continue reading Daily Dose 01-Aug-2019
Tag: Tamil-English Bilingual Daily Dose
Daily Dose 31-7-19
சாந்த சொரூபியாகிய நம் ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.கூப்பாடு போட்டு ஆரவாரம் செய்தால் தான் நம்மை இந்த உலகம் திரும்பி பார்க்கும் என்று எப்போதும் தன் நிலைமையை பரப்பி கொண்டே இருப்பார்கள் சிலர். செய்ய வேண்டிய காரியத்தை செவ்வனே செய்து முடித்தால் அதற்குரிய பங்கை ஆண்டவர் பரலோகத்திலிருந்து நமக்கு அனுப்பி வைப்பார். மனுஷர் தயவை நாடினால், தேவன் ஒதுங்கி விடுவார்.சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கிவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். மத் 5:5*கேள்வி & வேதாகம குழுவில் இணைந்து கொள்ளுங்கள்*. https://chat.whatsapp.com/B811iEJfVGh5yRqnJiuTAj… Continue reading Daily Dose 31-7-19
Daily Dose 30-7-19
உபத்திரவத்தின் மத்தியிலும் நம்மை பெலப்படுத்தும் இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன். சத்தியத்தை பற்றிக்கொண்டு உத்தமமாய் இருந்த யோபுவின் மீது பிசாசு கண் வைத்தான். பிள்ளைகள், சொத்துக்கள், வேலையாட்கள், மிருகஜீவன்கள் என்று எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் யோபு இழந்தார். (யோபு 1)சொந்த சரீரமும் அருவருக்கத்தக்க பருக்களால் நாசமானது. மனைவியாவது ஆறுதலாய் இருந்திருக்கலாம்... புருஷன் இனி பிரயோஜனம் இல்லை என்று நினைத்தாள் போலும்... அவள் பங்கிற்கு யோபுவை பார்த்து *ஜீவனை விடும்* என்று சொல்லி யோபுவின் இருதயத்தில் ஈட்டியை… Continue reading Daily Dose 30-7-19
Daily Dose 29-7-19
சுவிசேஷத்தின் மூலாதாரமான நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.படித்து கற்றுக்கொள்வதை காட்டிலும், எடுத்து சொல்வது - அதாவது மற்றவர் தவறை திருத்துவது இப்போது எல்லோருக்கும் எளிதாக படுகிறது.இரட்சிக்கப்படாமலே இருக்கும் லட்சங்களையும் கோடிகளையும் மறந்து; கிறிஸ்தவன், தவறானவர்களிடம் அல்லது மன கடினப்பட்டு வைராக்கியதோடு சத்தியம்-தெரிந்தும் கீழ்படியாமல் இருப்பவர்களிடம்; தன் நேரத்தை வீணடித்துக்கொண்டு இருக்கிறான் என்ற ஐயம் இருக்கிறது.தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன். யாக் 5:20சத்தியத்தை கேட்கும்… Continue reading Daily Dose 29-7-19
Daily Dose 01-6-19
எல்லா நன்மைகளையும் நமக்கு அருளும் தேவனுடைய நாமத்தில் வாழ்த்துக்கள். நமக்கு இப்போதெல்லாம் அதீத நம்பிக்கையும், வைராக்கியமும் அதிகமாகி இருக்கிறது. கேட்டது பொய்யோ மெய்யோ ஆனால், அதில் வைராக்கியமாய் இருந்து கொண்டு உண்மையை அறிந்தாலும் – அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள மனம் இடம் கொடுப்பதில்லை. குறைந்தபட்சம் மற்றவர்கள் ஜெபம் செய்யும்போது நாம் காது கொடுத்து கேட்க கூட நம்முடைய மனம் மறுத்துவிடுகிறது... நாமும் அவர்களோடு சேர்ந்துகொண்டு ஜெபித்து விடுகிறோம் !! டிவி யில் கலந்துரையாடல் போல் ஆகிவிட்டது நம்… Continue reading Daily Dose 01-6-19
You must be logged in to post a comment.